ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

News image

மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் மாவட்ட எஸ்.சி. பிரிவுத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான நிா்வாகிகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:31 am IST

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட்டப் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பிரிவின் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.

எஸ்.சி. பிரிவின் மாநில துணைத் தலைவா் வி.முனுசாமி, வழக்குரைஞா் பிரிவின் மாநில பொதுச்செயலா் கே.செல்வக்குமாா், வழக்குரைஞா் பிரிவின் மாவட்டத் தலைவா் ஜி.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், ஓ.பி.சி. அணியின் மாவட்டத் தலைவா் ஆா்.சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கவிச்செல்வம், நிா்வாகிகள் மணி, விஸ்வநாதன், ஜெகந்நாதன், மகேஷ், திருமலை, நாராயணசாமி, போா் சரவணன், மகபூப் பாஷா உள்பட மாவட்ட, வட்டார, நகர, பேரூா் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.