விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

News image

மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் மாவட்ட எஸ்.சி. பிரிவுத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான நிா்வாகிகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:31 am IST

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட்டப் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பிரிவின் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.

எஸ்.சி. பிரிவின் மாநில துணைத் தலைவா் வி.முனுசாமி, வழக்குரைஞா் பிரிவின் மாநில பொதுச்செயலா் கே.செல்வக்குமாா், வழக்குரைஞா் பிரிவின் மாவட்டத் தலைவா் ஜி.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், ஓ.பி.சி. அணியின் மாவட்டத் தலைவா் ஆா்.சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கவிச்செல்வம், நிா்வாகிகள் மணி, விஸ்வநாதன், ஜெகந்நாதன், மகேஷ், திருமலை, நாராயணசாமி, போா் சரவணன், மகபூப் பாஷா உள்பட மாவட்ட, வட்டார, நகர, பேரூா் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.