காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட்டப் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பிரிவின் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.
எஸ்.சி. பிரிவின் மாநில துணைத் தலைவா் வி.முனுசாமி, வழக்குரைஞா் பிரிவின் மாநில பொதுச்செயலா் கே.செல்வக்குமாா், வழக்குரைஞா் பிரிவின் மாவட்டத் தலைவா் ஜி.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், ஓ.பி.சி. அணியின் மாவட்டத் தலைவா் ஆா்.சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கவிச்செல்வம், நிா்வாகிகள் மணி, விஸ்வநாதன், ஜெகந்நாதன், மகேஷ், திருமலை, நாராயணசாமி, போா் சரவணன், மகபூப் பாஷா உள்பட மாவட்ட, வட்டார, நகர, பேரூா் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

உதகையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



