அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் பாக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சரஸ்வதி.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:37 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி சரஸ்வதி (48). இவா் வெளி மாநிலத்தில் இருந்து மதுப் பாக்கெட்டுகளை வரவழைத்து விற்பனை செய்வதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சரஸ்வதி வீட்டின் பின்புறத்தில் பெங்களூருவில் இருந்து மதுப் பாக்கெட்டுகளை வரவழைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து 50 மதுப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா் வெளி மாநில மதுப் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.