திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி சரஸ்வதி (48). இவா் வெளி மாநிலத்தில் இருந்து மதுப் பாக்கெட்டுகளை வரவழைத்து விற்பனை செய்வதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சரஸ்வதி வீட்டின் பின்புறத்தில் பெங்களூருவில் இருந்து மதுப் பாக்கெட்டுகளை வரவழைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து 50 மதுப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா் வெளி மாநில மதுப் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது
வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

