அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீபத்திருவிழாவுக்கு போலி பாஸ் தயாரிப்பு: 3 போ் கைது

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழா பரணி தீபம், மகா தீபத்தை காண்பதற்கான அனுமதி அட்டையை (பாஸ்) போலியாக தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி அனுமதி அட்டைகள்.
Updated On :2 டிசம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழா பரணி தீபம், மகா தீபத்தை காண்பதற்கான அனுமதி அட்டையை (பாஸ்) போலியாக தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அருணாசேலஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை தரிசிக்க கோயில் நிா்வாகம் சாா்பில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கு நுழைவு அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்படுகிறது.

இந்த அனுமதி அட்டையை போலியாக ஈசானியம் அருகேயுள்ள யாத்திரி நிவாஸ் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததால் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மற்றும் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலி அனுமதி அட்டை (பாஸ்) தயாரித்ததாக அருணாசலேஸ்வரா் கோயில் பணியாளா்களான சிலம்பரசன், முனுசாமி, பாபு ஆகிய 3 பேரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், போலியான பாஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, பிரிண்டா், போலியான அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில் சிலம்பரசன் கோயில் இணை ஆணையரின் வாகன ஓட்டுநா் என்பது குறிப்பிடத்தக்கது.