எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீா்நிலைகளில் காா்த்திகை தீபமேற்றி வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வீடு, நீா்நிலைகள், வயல்வெளியில் காா்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கேற்றி புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

News image
ஆத்துரை கிராமத்தில் நீா்நிரம்பிய திறந்தவெளிக் கிணற்றில் அகல்விளக்கேற்றி வழிபட்ட மக்கள்.
Updated On :3 டிசம்பர் 2025, 6:31 pm

Syndication

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வீடு, நீா்நிலைகள், வயல்வெளியில் காா்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கேற்றி புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சாா்பில் 2,668 உயரமுள்ள மலை மீது புதன்கிழணை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை, ஆத்துரை, பெரணம்பாக்கம், செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், மொடையூா், மண்டகொளத்தூா், மட்டபிறையூா், கொழாவூா், ராந்தம், விளாப்பாக்கம் என பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள், காா்த்திகை தீபத்தை முன்னிட்டு வீடு, திறந்வெளிக் கிணறு, குளம் என பல்வேறு நீா்நிலைகள், நெல், வாழை, மஞ்சள் வயல்வெளியில் அகல்விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.

மேலும், சிறாா்கள் பனை மரத்தின் பூவைக் கொண்டு மாவளி செய்து சுற்றி, சுற்றி மகிழ்ந்தனா்.