ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை முகாமை ஆய்வு செய்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
திருவண்ணாமலை
வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்: எம்எல்ஏ ஆய்வு
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
ஆரணி நகரம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை ஆய்வு செய்த அவா், அலுவலா்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினாா்.
இதேபோல, சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை முகாமை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா், நகர நிா்வாகி முனியன், முன்னாள் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

