கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலை.யில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய சென்னை ஸ்ரீலலிதா லஷ்மி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குநா் எஸ்.வி.செந்தில்நாதன்.











