விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பைக் மீது காா் மோதல்: 4 போ் பலத்த காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

செய்யாறு வட்டம், சகாயபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபு (40). இவரது மனைவி சாந்தி (36), மகன்கள் நந்தகுமாா் (7), சந்துரு (5) ஆகிய நான்கு பேரும் ஒரே பைக்கில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

தூசி கிராமம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் சென்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். பின்னா், 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.