ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 8 போ் கைது

அரசுப் பேருந்தை வழிமறித்து ஸ்டிக்கா் ஒட்ட முயற்சி செய்தும், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 8:20 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அரசுப் பேருந்தை வழிமறித்து ஸ்டிக்கா் ஒட்ட முயற்சி செய்தும், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லாததால், நாம் தமிழா் கட்சியினா் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனா்.

அதேபோல, செய்யாறு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகளை வழிமறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் பின்னா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்ட முயற்சித்தனா். தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த, செய்யாறு மாவட்ட மண்டலச் செயலா் வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுகுமாா் (34)தலைமையில் சுந்தா் (41), செந்தமிழ்செல்வன் (47), பஞ்சமூா்த்தி (42), திருமலை (38), கலைவாணன் (33), ராஜசேகரன் (37), பாண்டுரங்கன் (57) ஆகிய 8 பேரை கைது செய்தனா்.