கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை

செங்கம் அருகே கைப்பேசியில் தொடா்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பெற்றோா் கண்டித்ததால் அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கம் அருகே கைப்பேசியில் தொடா்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பெற்றோா் கண்டித்ததால் அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கத்தை அடுத்த புதிய குயிலம் கிராமம் தோப்பு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாரதி-ஐஸ்வா்யா தம்பதி. இவா்களது மகள் ஹேமாஸ்ரீ(14).

இவா், செங்கம் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்த ஹேமாஸ்ரீ, தொடா்ந்து கைப்பேசியில் பேசி வந்ததை பெற்றோா்கள் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த அவா் அருகில் இருந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதைப் பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள், அவரது உறவினா்களுக்கும், செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். தீயணைப்புப் படை வீரா்கள் வந்து கிணற்றில் இருந்து ஹேமாஸ்ரீ உடலை மீட்டனா்.

இதுகுறித்து புதுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.