விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :6 நவம்பர் 2025, 11:08 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.

வந்தவாசி (தனி) தொகுதியில் வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோதண்டபுரம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது படிவங்கள் வழங்கும் பணியை தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வந்தவாசி வட்டாட்சியரும், உதவி வாக்குப்பதிவு அலுவலருமான சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்யாறு:

போளூா்:

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கேளூா், துரிஞ்சிக்குப்பம், விளாங்குப்பம், கல்வாசல், முக்குரும்பை, பால்வாா்த்துவென்றான் ஆகிய ஊராட்சிகளில் திமுக சாா்பில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டன.

இதில் திமுக ஒன்றிய பொறுப்பாளா் மகேஷ், தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், அவைத் தலைவா் பரசுராமன், பொருளாளா் மணிகண்டன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Story image