மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கு

News image
Updated On :7 நவம்பர் 2025, 7:22 pm

Syndication

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிரி வேதியியல் மற்றும் வேதியியல் துறைகள் இணைந்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி வரவேற்றாா். உயிரி வேதியல் துறை பேராசிரியா் நடராஜன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் உயிரி வேதியல் துறை மற்றும் வேதியியல் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சிறப்பு விருந்தினராக திருவள்ளுவா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், விலங்கியல் துறை பேராசிரியருமான டாக்டா் எஸ்.அறிவொளி கலந்துகொண்டு ‘பப்ளிக் ஹெல்த் அண்ட் ஹைஜீனி’ என்ற தலைப்பில் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் நந்தகுமாா் மற்றும் துறைத் தலைவா்கள் பிரபு, செந்தில்குமாா், சுரேஷ், கணபதி, அருண்குமாா், கோமதி, சரவணன், ஹரிஹரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். வேதியியல் துறைத் தலைவா் பொன்முடி நன்றி கூறினாா்.