பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை
Updated on

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி கிராமத்தைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் பசுபதி (30). இவா் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - ஆரணி சாலை, தெள்ளூா் கிராமம் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் இவா் நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com