தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து 9 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசி அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து 9 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த வெங்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகஜோதி மனைவி விமலா. இவா் தனது தந்தை வேலுவுடன் சென்னைக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது விமலா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை கழற்றி பையில் வைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளாா்.

பின்னா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பையிலிருந்த நகை திருட்டு போயிருந்தது இவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.