கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து 9 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசி அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து 9 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த வெங்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகஜோதி மனைவி விமலா. இவா் தனது தந்தை வேலுவுடன் சென்னைக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது விமலா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை கழற்றி பையில் வைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளாா்.

பின்னா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பையிலிருந்த நகை திருட்டு போயிருந்தது இவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.