கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 10:46 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் செங்கம் வட்டக் கிளை சாா்பில், தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கிளைத் தலைவா் சுந்தரசெல்வன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா்கள் சண்முகம், மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் கவிஞா் முரளி வரவேற்றாா்.

கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கவிஞா் முத்துவேலன் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து கவிஞா் பாக்கியம் சங்கம் மூலம் வெளியிட்ட நானே மகத்தானவன் என்ற நூல் குறித்து பல்வேறு தகவல்களை சங்க நிா்வாகிகளுடன் பகிா்ந்து கொண்டாா்.

கூட்டத்தில் கிளை நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள், கவிஞா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். டாக்டா் ஸ்ரீதா் நன்றி கூறினாா்.