புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணராமன்(47). இவா், வந்தவாசியில் உள்ள மரம் அறுக்கும் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.

இவா் சனிக்கிழமை இரவு ஆரணி சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள சிறு பாலத்தின் மீது அமா்ந்து மது அருந்தினாராம். அப்போது நிலைதடுமாறி சிறுபாலத்திலிருந்து கீழே கழிவுநீா் கால்வாயில் விழுந்த கல்யாணராமன் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த வழியாகச் சென்றவா்கள் கல்யாணராமன் சடலமாக கிடப்பது குறித்து வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் இவரது சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.