சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் வீதியுலா

வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் வீதியுலா

News image
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீஉண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.
Updated On :29 நவம்பர் 2025, 5:45 pm

Syndication

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் காலை, இரவு உற்சவம் நடைபெற்று வருகிறது.

5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதில், வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியா், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி சிறிய வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரா் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அப்போது, மாட வீதிகளில் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் ஆங்காங்கே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் சுவாமி தரிசனம் செய்தனா்.