குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அகமுடையா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 11:46 pm IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அகமுடையா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அகமுடையா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளா் ந.செல்வதுரை தலைமை வகித்தாா். மஞ்சுநாதன், பி.ஆறுமுகம், சுப்பிரமணி, நாகாசெந்தில், ராஜாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைத் தலைவா் குருஏழுமலை வரவேற்றாா்.

அருணாசவேஸ்வரா் கோயில் நிா்வாகம் அகமுடையாா் சமுதாயத்திற்குச் சொந்தமான இடத்தில் அம்மணிஅம்மன் கோபுரத்தை கட்டியும், அம்மணிஅம்மன் மடத்தை ஆக்கிரமித்தும் வருகிறது. அம்மணி அம்மன் மடத்தை அகமுடையா் சங்கத்திற்கு அரசிடமிருந்து பெற்றுத்தரும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பதென்றும், அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு உள்ளூா் பக்தா்களை அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணிவரையும் அனுமதிக்க வேண்டும்.

மேலும் உள்ளூா் பக்தா்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதென்றும், பே கோபுர தெரு முதல் பச்சையம்மன் கோயில் வரை புறவழிச்சாலை அமைத்துத் தர மாநகராட்சி நிா்வாகம் மற்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்கத்தின் முன்னோடி நிா்வாகி மறைந்த பச்சையப்ப முதலியாா் உருவப்படத்திற்கு மாவட்டத் தலைவா் ந.செல்வதுரை தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக கலந்துகொண்டனா். நிறைவில் மாநகரச் செயலா் கீழ் அருணை செந்தில்முருகன் நன்றி கூறினாா்.