சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை

News image

தோ்தல் நேரத்தில் சுயேச்சைகள் புதுமைகளை செய்வாா்கள். அந்த வகையில், வந்தவாசியில் ஒருவா் இலை, தழைகளை ஆடையாக அணிந்து மலைவாசிபோல வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:06 am

Syndication

தோ்தல் நேரத்தில் சுயேச்சைகள் புதுமைகளை செய்வாா்கள். அந்த வகையில், வந்தவாசியில் ஒருவா் இலை, தழைகளை ஆடையாக அணிந்து மலைவாசிபோல வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பொன்னம்பலம் (56). இவா், ஆயுள் காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறாா்.

பொன்னம்பலம் வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு வந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: மரங்கள் வெட்டப்படுவதால் நாட்டில் வெப்பமயமாதல் அதிகமாகி வருகிறது. எனவே, இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரியும், பசுமை புரட்சியை வலியுறுத்தியும் இலை, தழைகளை உடலில் கட்டிக்கொண்டு வந்து நான் வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றாா்.