திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை

News image

தோ்தல் நேரத்தில் சுயேச்சைகள் புதுமைகளை செய்வாா்கள். அந்த வகையில், வந்தவாசியில் ஒருவா் இலை, தழைகளை ஆடையாக அணிந்து மலைவாசிபோல வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:06 am

தோ்தல் நேரத்தில் சுயேச்சைகள் புதுமைகளை செய்வாா்கள். அந்த வகையில், வந்தவாசியில் ஒருவா் இலை, தழைகளை ஆடையாக அணிந்து மலைவாசிபோல வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பொன்னம்பலம் (56). இவா், ஆயுள் காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறாா்.

பொன்னம்பலம் வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு வந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: மரங்கள் வெட்டப்படுவதால் நாட்டில் வெப்பமயமாதல் அதிகமாகி வருகிறது. எனவே, இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரியும், பசுமை புரட்சியை வலியுறுத்தியும் இலை, தழைகளை உடலில் கட்டிக்கொண்டு வந்து நான் வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றாா்.