திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :11 ஏப்ரல் 2026, 12:44 am IST

தோ்தல் விதிமுறையை மீறி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராக ஏ.ஞானசேகா் போட்டியிடுகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் எச்சரிக்கையை மீறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தோ்தல் விதிமுறைகளை மீறி கூட்டணி கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனா்.

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய உடன் செல்ல வேண்டும் என தோ்தல் கமிஷன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.