உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:54 pm

வந்தவாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை சைக்கிள் ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி நகரில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

வந்தவாசி பயணியா் விடுதி அருகிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் ஆரணி சாலை, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், சைக்கிள் ரிக்சாவை ஓட்டிச் சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3-ஆவது வாா்டு பகுதிக்காக ரூ.55 லட்சம் மதிப்பில் மயானப் பாதை, ரூ.5.50 கோடி மதிப்பில் தோழி தங்கும் விடுதி, ரூ.42 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் ஆகியவை கட்டப்பட்டது என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் திமுகவினா், கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.