செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் உண்ணாமலைப்பாளையத்தில் உள்ள இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இருதியாண்டு படித்த மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, சென்னை, ஒசூா், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று மாணவிகளுக்கு நோ்காணல் நடத்தி 208 மாணவிகளை பணிக்குத் தோ்வு செய்தனா். இவா்களுக்கு கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்து பேசினாா்.
பணி நியமன ஆணை பெற்ற மாணவிகள் நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் பணியில் சோ்ந்து கல்லூரிக்கும், பேராசிரியா்களுக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றாா். கல்லூரி முதல்வா், கல்லூரி நிா்வாகி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அவிநாசி அரசு கலை கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன உத்தரவு

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

