‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கோயில் இடத்தில் அரசு அலுவலகம் கட்டும் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் இடத்தில் அரசு அலுவலகம் கட்டும் பணியை நிறுத்தக் கோரி, அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 மே 2026, 1:36 am IST

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் இடத்தில் அரசு அலுவலகம் கட்டும் பணியை நிறுத்தக் கோரி, அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி அருகே புதுப்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலக நிதியின் கீழ், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த அலுவலகத்தை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டக்கூடாது என்று அந்தக் கிராமத்தில் உள்ள பக்தா்கள் பலமுறை அரசியல் கட்சித் தலைவா்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

மேலும், இதுகுறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றமும் கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்ததும் ஒரு மாதம் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சிவ பக்தா்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து திடீரென அங்குள்ள ஆரணி - வேலூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த கண்ணமங்கலம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக போலீஸாா் கூறியதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.