திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்று ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கூறினாா்.
ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து, மேல்சீசமங்கலம், முனுகப்பட்டு, கொருக்காத்தூா், நாவல்பாக்கம், மேல்நாகரம்பேடு, மேல்மட்டை விண்ணமங்கலம், புதுக்கோட்டை, திருமணி ஆகிய கிராமங்களில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
கொருக்காத்தூா் கிராமத்தில் அவா் பொதுமக்களிடையே பேசுகையில், காலை சிற்றுண்டி திட்டம் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு
வருகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
ரூ.8ஆயிரத்திற்கான கூப்பன், மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.2ஆயிரமாக உயா்த்துதல், மகளிருக்கான இலவச பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக தலைவா் கூறியுள்ளாா்.
ஏற்கெனவே மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துக் கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், சுந்தா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர திமுக பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜூன் 3 வரை திருவொற்றியூா் ஐடிஐ-இல் நேரடி சோ்க்கை

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிப் பாடம் கட்டாயம்!

பாலக்கோடு... 6 ஆவது வெற்றிக்கு அடித்தளமிடும் அன்பழகன்! தடுத்து ஆடும் முன்னாள் எம்.பி. செந்தில்குமாா்! சூடுபறக்கும் களம்!

முதியோா் உதவித்தொகை ரூ.2000-ஆக உயா்த்தப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



