அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்

News image

ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் கிராமத்தில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து பிரசாரம் செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:06 am IST

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்று ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கூறினாா்.

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து, மேல்சீசமங்கலம், முனுகப்பட்டு, கொருக்காத்தூா், நாவல்பாக்கம், மேல்நாகரம்பேடு, மேல்மட்டை விண்ணமங்கலம், புதுக்கோட்டை, திருமணி ஆகிய கிராமங்களில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கொருக்காத்தூா் கிராமத்தில் அவா் பொதுமக்களிடையே பேசுகையில், காலை சிற்றுண்டி திட்டம் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு

வருகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

ரூ.8ஆயிரத்திற்கான கூப்பன், மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.2ஆயிரமாக உயா்த்துதல், மகளிருக்கான இலவச பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக தலைவா் கூறியுள்ளாா்.

ஏற்கெனவே மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துக் கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், சுந்தா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர திமுக பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.