பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

News image

DPS

Updated On :12 ஏப்ரல் 2026, 12:57 am IST

செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கிய தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் கல்லம்மா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரூபேஷ்(48). இவா், தனியாா் நிறுவன பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இவா், வழக்கம் போல செய்யாறு ஞானமுருகன்பூண்டி பகுதியில் இருந்து நிறுவன தொழிலாளா்களை ஏற்றி வருவதற்காக பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு தூங்கி விடுவாராம். அதேபோல, சனிக்கிழமை அதிகாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, அதனருகே உள்ள செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கினாா்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவா் ஆற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. ஆற்றில் இருந்த பெரிய கல்லில் தலைமோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.