செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடித்த 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.
கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தக் கல்லூரியில் பயின்ற 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
நிகழாண்டு முதல் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு கேடயம்
வழங்கப்படும். அதேபோல் வாரியத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பத்தரப்பட்டு வருகிறது என்றாா்.
பின்னா், 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனை ஆணைகள் அவா்களது பெற்றோா் கரங்களால் அா்ச்சனை செய்து வழங்கப்பட்டது.
முன்னதாக கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி பேசினாா். நிறைவில் கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் நன்றிகூறினாா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

பாலிடெக்னிக் மாணவா்கள் 159 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


