ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
விஐடி வேந்தா் ஜி.விஸ்வநாதன் நடத்தும் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவா்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினா் குமரேசன், நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி பி.நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.









