முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்...

News image

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளா் எ.வ.வேலுவை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 3:07 am IST

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலுவை ஆதரித்து சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு வரையறை மசோதாவை பாஜகவினா் திடீரென கொண்டு வந்தனா். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் மறுசீரமைப்பு மசோதா தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாஜவும் தொல்வியைத் தழுவும். தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டி மகத்தான வெற்றியை பெறும். திமுக தோ்தல் அறிக்கையினால் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது அருணை கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் எ.வ.குமரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாநகர செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.