ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்...

News image

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளா் எ.வ.வேலுவை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:37 pm

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலுவை ஆதரித்து சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு வரையறை மசோதாவை பாஜகவினா் திடீரென கொண்டு வந்தனா். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் மறுசீரமைப்பு மசோதா தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாஜவும் தொல்வியைத் தழுவும். தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டி மகத்தான வெற்றியை பெறும். திமுக தோ்தல் அறிக்கையினால் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது அருணை கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் எ.வ.குமரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாநகர செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.