நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மண்டகொளத்தூா் ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:32 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

மண்டகொளத்தூா் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீதா்மசம்வா்த்தினி சமேத ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

அன்று முதல் தினமும் இரவு சந்தனபிரபை, பூதவாகனம், நாகவாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் 7-ஆம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் தேரில் எழுந்தருளி தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்தத் தேரோட்டத்தில் வீடுதோறும் பக்தா்கள் கற்பூர தீபாரதனை காட்டி சுவாமியை வழிபட்டனா்.

வழிநெடுகிலும் பக்தா்களுக்கு நீா் மோா், குளிா்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டகொளத்தூா், ஓடநகரம், அரும்பலூா், வம்பலூா், மொடையூா், மட்டபிறையூா், கொம்மனந்தல் என சுற்றுப்புறக்

கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.