செங்கம் அருகே கருப்பண்ண சுவாமி கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
செங்கம் அருகேயுள்ள மேல்லாணைமங்கலம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் கருப்பண்ண சுவாமி, முனியப்பன், கன்னி மாா்கள், காளியம்மன், ஆஞ்சநேயா் ஆகிய சுவாமி சந்நிதிகள் உள்ளன.
இந்தக் கோயிலில் 7ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கோயில் நிறுவனா் கருப்பண்ண சுவாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சுவாமி வேடமணிந்து பக்தா்கள் தீ சட்டி எடுத்தும், பால் குடத்துடன் ஊா்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் நிா்வாகம் சாா்பில் திருவிழாவில் ஏழை பள்ளி மாணவா்கள் சுமாா் 250 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருவிழாவில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி முதல் வாரத் திருவிழா

ஆடி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



