தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் தீமிதித்த பக்தா்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:40 pm IST

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனா். திங்கள்கிழமை அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து வெடால் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் அம்மனை வேண்டிக் கொண்டு தீமிதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.