சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

நீா்நிலை பகுதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்

வந்தவாசி அருகே நீா்நிலை பகுதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நீா்வளத் துறையினா் தொடங்கினா்.

News image

வெங்கோடு கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச் சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளா்கள்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

வந்தவாசி அருகே நீா்நிலை பகுதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நீா்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

வந்தவாசியை அடுத்த வெங்கோடு கிராமத்தில் ஏரி நீா்வரத்துக் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து 3 வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த வீடுகளை இடித்து அகற்றுவதற்காக வருவாய்த் துறையினா் மற்றும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாருடன் உதவிப் பொறியாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட நீா்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனா்.

அப்போது வீடுகளை இடிக்க வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படி அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நீா்வளத் துறையினா் தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.