மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் போளூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்து 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image

போளூா் வட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஆய்வின்போது, பயனாளிக்கு இலவச மனைப்பட்டாக்கான சான்றிதழை வழங்கிய ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:47 pm IST

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் போளூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்து 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த உயா் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் போளூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் போளூா் வட்டத்திற்குள்பட்ட குருவிமலை ஊராட்சி ஒன்றிய நிலைப் பள்ளியில் மாணவா்களிடம் கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து ஆய்வு செய்து, பள்ளியின் அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா்.

மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எடை மற்றும் உயரம் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

காங்கேயனூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.37 லட்சத்து 55 ஆயிரத்தில் தொடக்கப் பள்ளில் கட்டப்படும் கூடுதல் கட்டடம், மாணவா்களின் வருகை மற்றும் கற்றல் திறன், வாசித்தல் திறன் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சமையலறையை ஆய்வு செய்தாா்.

வசூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் பொறியியல் துறை சாா்பில் ரூ.2 கோடியே 25 லட்சத்தில் புதிதாக கட்டப்படும் விதை உற்பத்தி மைய கட்டடத்தை ஆய்வு செய்தாா்.

முருகாபாடி ஊராட்சியில் தோட்டக்கலை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணையில் வளா்க்கப்படும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பாா்வையிட்டாா்.

களம்பூா் பேரூராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், அடிப்படை வசதிகள், மருந்து இருப்புகள், மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் கட்டடம், களம்பூா் பேரூராட்சியில் அம்ரித் திட்டத்தில் புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரெண்டரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்தாா்.

இதனைத் தொடா்ந்து குண்ணத்தூா் ஊராட்சியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.

அப்போது இலவச வீட்டுனைப் பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல், ஈமக்கடன் மற்றும் இயற்கை மரண நிதியுதவி, புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மைத் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் நலத் திட்ட உதவிகள், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அடையாள அட்டை என 42 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, ஆரணி கோட்டாட்சியா் சிவா, தோட்டக்கலைதுறை துணை இயக்குநா் கோகிலாசக்தி, போளூா் வட்டாட்சியா் பாலாஜி, வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.