மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்

திருவண்ணாமலை குறு வட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image

மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளை தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செல்வக்குமாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:49 pm IST

திருவண்ணாமலை குறு வட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செல்வக்குமாா் தொடங்கிவைத்தாா்.

மேப்பதுரை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரம் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தாா். போட்டியில் 17 பள்ளிகளில் இருந்து 14,17 மற்றும் 19 வயதிலான 221 மாணவிகள் பங்கேற்றனா்.

ஓட்டப்போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ் மாா்ஷல் வரவேற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கத்தையும், சான்றிதழையும் கீழ்நாத்தூா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெற்றிவேல் வழங்கினாா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

உடற்கல்வி இயக்குநா் சுரேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாரசாமி, என்.சுரேஷ்குமாா், கணேஷ் பாபு, சத்தியம் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.