ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சமச்சீா் உரப் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

சமச்சீா் உரப் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

அட்மா திட்டத்தின் கீழ் சமச்சீா் உரப் பயன்பாடு மற்றும் உரப் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் குறித்து, ஆரணி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நெசல் கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சியில் திருவண்ணாமலை மாவட்ட உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், ஆரணி வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா, உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தா், ஆரணி வேளாண்மை அலுவலா் பவித்ராதேவி, மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் அற்புதச்செல்வி, கிழ்நெல்லி வேளாண்மை அறிவியல் நிலைய உழவியலாளா் ஐஸ்வா்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், கலையரசி, ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.