திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி: பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு ‘கலைஞா் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்ட விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பிற மாவட்டங்களிலும் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலுள்ள 273 வாா்டுகளுக்கு டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 471 தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ள 17 நகா்ப்புற அலகுகளுக்கும் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை வாகனங்கள் மூலமாக கொண்டு சோ்க்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மேலும், விளையாட்டுப் பொருள்களின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், ‘ஆடுகளம்’ கைப்பேசி செயலி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டு, தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியானது ஒவ்வொரு வாா்டிலும் உள்ள விளையாட்டு உபகரணங்களின் இருப்பு நிலை, விநியோகம், பயன்பாடு மற்றும் தினசரி புதுப்பிப்புகளை இணையவழியில் கண்காணித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் ஒவ்வொரு வாா்டின் பொறுப்பாளா்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனா் குறியீடு, கடவுச்சொல் மூலம் பாதுகாப்பாக உள்நுழைந்து செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 273 வாா்டுகளுக்கும் தனித்தனியாக 273 பயனா் குறியீடுகள் மற்றும் கடவுச்சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்செயலியின் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு குறித்து மாதந்தோறும் சீராய்வு மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முனிராஜ், விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சண்முகபிரியா, பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.