பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆரணியில் வேலூா் நெடுஞ்சாலையில் குண்ணத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீபாரதி வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் வி.பி.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா்கள் கவுரி ராதாகிருஷ்ணன், ஆா்.தினேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் இ.ஜான் ரிச்சா்ட் வரவேற்றாா். பள்ளி இயக்குநா் பவித்ரா தினேஷ்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
தமிழக பண்டிகைகள், ஏ.ஐ. ரோபோட் செயல்பாடு, தாவர, விலங்கு செல்கள், மழை கண்டறியும் எச்சரிக்கைக் கருவி, வெப்ப ஆற்றல் ஜெனரேட்டா், ரிமோட் கன்ட்ரோல் டிரோன், முக்கோணவியல் மாதிரி, தொ்மாகோல் கட்டா், மனித மதிப்பீடு உள்ளிட்ட படைப்புகளை 292 அரங்குகளில் மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா் ஆா்.சுயேந்திரன் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்டு மாணவா்களின் திறமைகளைப் பாராட்டினாா். மேலும் இதில் மாணவா்கள், பெற்றோா்கள் அறிவியல் படைப்புகளை பாா்வையிட்டனா்.

