இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலத்த காயம்

திருவண்ணாமலை பே கோபுர 11-ஆவது தெருவில் உணவு தேடி வந்த புள்ளிமானை அந்தப் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் மான் பலத்த காயமடைந்தது.

News image

நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளிமானை மீட்கும் வனத்துறையினா்

Updated On :21 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை பே கோபுர 11-ஆவது தெருவில் உணவு தேடி வந்த புள்ளிமானை அந்தப் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் மான் பலத்த காயமடைந்தது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு புள்ளிமான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வன விலங்குகள் குடிநீா் மற்றும் உணவு தேடி அடிக்கடி நகரப் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பே கோபுர 11-ஆவது தெருவில் உணவு தேடி வந்த புள்ளிமானை அந்தப் பகுதியில் இருந்த 5 மேற்பட்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்தன. இதில் மானுக்கு கழுத்து மற்றும் தொடை பகுதிகள் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்து மயக்கம் நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.