தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகப்பட்டதன் பேரில் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து...

News image

திருமணத்தில் உணவு நஞ்சானதாக சந்தேகம் - ANI

Updated On :29 மார்ச் 2026, 12:37 pm IST

உத்திரப் பிரதேசத்தில் திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகப்பட்டதன் பேரில் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகமது நஜிம் என்பவரின் திருமணத்தின் போது, ​​தேவா பகுதியின் லாலாபூர் வட்டாரத்தில் சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட பல்வேறு அசைவ உணவுகளை உட்கொண்ட விருந்தினர்கள் சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்படத் தொடங்கினர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சையை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு வந்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அவதேஷ் யாதவ், “உள்ளூர் மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் விரைந்து அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஆரம்பத்தில் தேவாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பலர் உயர்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் உடல்நிலை சீரடைந்த பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உணவு நஞ்சானதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சுகாதாரத் துறை முழுமையான விசாரணை நடத்தி வருகிறது” எனத்ன் தெரிவித்தார்.

மேலும், அதிகாரிகள் பரிசோதனைக்காக உணவு மாதிரிகளைச் சேகரித்து அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Summary

In Uttar Pradesh, more than 30 people have been hospitalized on suspicion of food poisoning at a wedding event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.