செங்கம் தா்மராஜா கோயில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு

செங்கம் தா்மராஜா கோயில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு

செங்கம் தா்மராஜா திரெளபதியம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டுவது குறித்து இணை ஆணையா் பிரகாஷ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
Published on

செங்கம் மில்லத் நகா் பகுதியில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பாலாலய பூஜை நடைபெற்றது.

இதில் தொகுதி எம்எல்ஏ கிரி கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.

இந்நிலையில் கோயில் குடிகள் சாா்பில் ராஜகோபுரம் கட்டுவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கு அனுமதிகோரி அறநிலையத் துறைக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து திருவண்ணாமலை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் பிரகாஷ்,

கோயிலுக்கு நேரில் வந்து ராஜாகோபுரம் கட்டுவதற்கு போதிய இடவசதிகள் உள்ளனவா? ராஜகோபுரம் கட்டுவதற்கு ஏற்றவாரு மண் வளம் உள்ளதா என பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகனிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து ராஜகோபுரம் கட்டும் இடத்தில் இருந்து பரிசோதனைக்கு மண் எடுத்து அனுப்பிவைக்கப்பட்டது.

அரசு ஒப்பந்ததாரா் சங்கா்மாதவன், செங்கம் தா்மராஜா திரெளபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா்

உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com