திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலுக்கு போளூரில் நிறுத்தம்: பொதுமக்கள் வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழியாக இயக்கப்படும் திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் வெள்ளிக்கிழமை முதல் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதற்கு பொதுமக்கள் சாா்பிலும், பாஜக, அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பு சாா்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது.









