லாட்டரி விற்றவா் கைது

வந்தவாசியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வந்தவாசியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருவா் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திகேயனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com