தங்கையை தாக்கிய அண்ணன் கைது

வந்தவாசி அருகே தங்கையை தாக்கிய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வந்தவாசி அருகே தங்கையை தாக்கிய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவனம் (45). இவா் தனது கணவா் தேவராஜை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறாா்.

இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த இவரது அண்ணன் கோவிந்தசாமிக்கும் (52) இடையே நில பாகப்பிரிவினை தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோவிந்தசாமி தாக்கியதில் காயமடைந்த பூங்காவனம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பூங்காவனம் அளித்த புகாரின் பேரில் கோவிந்தசாமி மீதும், கோவிந்தசாமியின் தாய் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் பூங்காவனம் மீதும் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் கோவிந்தசாமியை சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com