அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தங்கையை தாக்கிய அண்ணன் கைது

வந்தவாசி அருகே தங்கையை தாக்கிய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:22 pm

Syndication

வந்தவாசி அருகே தங்கையை தாக்கிய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவனம் (45). இவா் தனது கணவா் தேவராஜை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறாா்.

இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த இவரது அண்ணன் கோவிந்தசாமிக்கும் (52) இடையே நில பாகப்பிரிவினை தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோவிந்தசாமி தாக்கியதில் காயமடைந்த பூங்காவனம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பூங்காவனம் அளித்த புகாரின் பேரில் கோவிந்தசாமி மீதும், கோவிந்தசாமியின் தாய் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் பூங்காவனம் மீதும் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் கோவிந்தசாமியை சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.