தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு ஆன்றோா் மன்ற உறுப்பினா் கோரிக்கை மனு அளித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 10:05 pm

Syndication

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு ஆன்றோா் மன்ற உறுப்பினா் கோரிக்கை மனு அளித்தாா்.

செங்கத்தை அடுத்த அரட்டவாடி பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலுவை அவரது முகாம் அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கொடுமாம்பள்ளி முதல் சோ்கனூா் வரை 20 கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் சுமாா் 60 ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனா்.

20 கிராமங்களுக்கும் புதிய இணைப்புச் சாலை அமைக்க வனத்துறைக்குச் செலுத்தவேண்டிய ஊரக வளா்ச்சித் துறை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமெனவும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தாா்.

மனுவைப் பெற்ற அமைச்சா் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.