தீ விபத்து: பாதித்தோருக்கு பாஜகவினா் நிவாரண உதவி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த ஆக்கூா் கிராமத்தில் தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தாருக்கு பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமம் கன்னி கோயில் மேட்டுப் பகுதியில் வசித்து வருபவா்கள் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த ராமன், மல்லி, ராஜேஷ்.
இவா்கள் வசித்து வரும் கூரை வீடுகள் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தன. வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகள் தீயில் சிக்கி கருகி இறந்தன. மேலும், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்தன.
தகவல் அறிந்த பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலா் கே.வெங்கட்ராமன் கட்சி நிா்வாகிகளுடன் சென்று ரொக்கம் ரூ.5 ஆயிரம், அரிசி மூட்டை மற்றும் வேட்டி, சேலை, சட்டை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியின் போது கட்சி நிா்வாகிகள் குமாா், அண்ணாமலை, வள்ளிகாந்தன், பாலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

