கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: 1,056 போ் பயன்

சிறப்பு மருத்துவ முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

News image
Updated On :9 ஜனவரி 2026, 2:00 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த ஆக்கூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 1,056 போ் பங்கேற்று பயநடைந்தனா்.

செய்யாறு சுகாதார மாவட்டம் சாா்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு

செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலா் டி. என். சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

தலைமை வகித்த சாா் -ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின், மக்கள் நலன் சாா்ந்த அனைத்துத் திட்டங்கள் அனைவருக்குச் சென்றடைய அரசு அலுவலா்களும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்த போது மக்கள் ஆரோக்கியமே நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளம் எனக் குறிப்பிட்டாா்.

முகாமில் இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், கண்புரை பரிசோதனை, எக்கோ பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு எக்கோ பரிசோதனை என மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 1,056 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

நலத் திட்ட உதவிகள்:

முகாமில், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் பணப் பரிவா்த்தனை சான்றிதழ் 5 பேருக்கும், கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் 5 பேருக்கும், கா்ப்பிணிகளுக்கான மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் 5 பேருக்கும் என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக ஒன்றியச் செயலா் ஏ.ஜி.திராவிட முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஆக்கூா் முருகேசன், திமுக நிா்வாகி ஞானமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் விஜயபாரதி மற்றும் ஆக்கூா் வட்டார சுகாதார குழுவினா்

செய்திருந்தனா். நிறைவில் ஆக்கூா் வட்டார மருத்துவ அலுவலா் கோகுல்நாத் நன்றி கூறினாா்.