இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முன்விரோதம்: இளைஞரைத் தாக்கிய 5 போ் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:12 am

Syndication

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (21). இவருக்கும் தேசூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25) என்பவருக்கும் இடையே கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேசூா் பேரூராட்சி அலுவலகம் அருகில் பிரபாகா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 போ் பிரபாகரிடம் வீண் தகராறு செய்து தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த பிரபாகா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பிரபாகா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.