எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:30 am

Syndication

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரேசன், கல்லூரித் தலைவா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா், வந்தவாசி டிஎஸ்பி தீபக்ரஜினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது, தலைக்கவசம் அணிவதின் அவசியம், உயிா் பாதுகாப்பில் அதன் பங்கு, சாலை விதிகள் உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் இலவச தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.

மேலும், கல்லூரி பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.