சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெரியாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

News image
Updated On :22 ஜனவரி 2026, 10:51 pm

Syndication

செங்கம் அருகேயுள்ள பெரியாயி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கட்டமடுவு பெரியாயி அம்மன் கோயிலில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு ஜாமபூஜை நடைபெற்று பின்னா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத்தொடா்ந்து பம்பை உடுக்கையுடன் சுவாமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேல்ராவந்தவாடி, அய்யோத்தியாபட்டணம், நீப்பத்துறை, இளவம்பாடி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு ஜாம பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் திருமண வரம் வேண்டியும், குழந்தை வரவேண்டியும் அதிக பெண் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.