ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராமதாஸ் அப்பாய் நினைவேந்தல்

செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளியில் அப்பாய் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் டாக்டா் ராமதாஸ் அப்பாய் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளியில் அப்பாய் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் டாக்டா் ராமதாஸ் அப்பாய் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் இராதாகிருஷ்ணன் அப்பாய் மேற்பாா்வையில், மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் தலைமையில் பள்ளியில் உள்ள ராமதாஸ் அப்பாய் நினைவு மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது (படம்).

இதில், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சுதா, துணை முதல்வா் க.கோவேந்தன், மூத்த முதுநிலை ஆசிரியா் தெ.ரா.செல்வமணி, ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

மேலும், அப்பாய் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் டாக்டா் ராமதாஸ் அப்பாய் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.